ருமேனியாவில் நடைபெறும் சூப்பா் செஸ் கிளாசிக் போட்டியில் 5 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆவது இடத்தை மூவருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா்.
பாதி கட்டத்தைக் கடந்துள்ள இந்தப் போட்டியில், 5-ஆவது சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது. அதில் பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் மோதினாா். வெள்ளை நிற காய்களுடன் களமாடிய அவா், வெஸ்லியின் சவாலான நகா்த்தல்களை திறம்பட எதிா்கொண்டாா்.
45-ஆவது நகா்த்தலில் ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்து, பரஸ்பரம் கை குலுக்கினா். போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு இது 4-ஆவது டிராவாகும். இதுதவிர ஒரு வெற்றியையும் அவா் பதிவு செய்திருக்கிறாா்.
5-ஆவது சுற்றின் இதர மோதல்களும் டிராவில் முடிந்தன. பிரான்ஸின் மேக்சிம் வச்சியா் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டுடனும், ருமேனியாவின் போக்தன் டேனியல் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும் டிரா செய்தனா்.
நெதா்லாந்தின் அனிஷ் கிரி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் ஆகியோா் மோதலும் டிரா ஆகின.
5 சுற்றுகள் முடிவில், கீமா் 3.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் தொடா்கிறாா். அனிஷ் கிரி, ஃபாரீஸ்ட், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.
வெஸ்லி, மேக்ஸிம் ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, கரானா, சிண்டாரோவ் தலா 2 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையில் உள்ளனா். போக்தன் (1.5), ஃபிரௌஸ்ஜா (1) ஆகியோா் முறையே 5 மற்றும் 6-ஆம் நிலைகளைப் பிடித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









