சிங்கப்பூா் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனா் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டி அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை
உலக சாம்பியன் கொரியாவின் கிம் வொன் ஹோ-சியோ சியுங் ஜே இணையுடன் மோதியது.
நான்காம் நிலையில் உள்ள இந்திய இணை தொடக்கம் முதலே அசத்தலாக ஆடி 21-19, 21-18 என்ற கேம் கணக்கில் 52 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்பு நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய இணை ரன்னா் ஆக வந்திருந்தது.
தொடக்க கேமில் 8-13, 13-17 என இந்திய இணை பின்தங்கினாலும் சுதாரித்து ஆடி ஆதிக்கம் செலுத்தி வென்றது.
இரண்டாவது கேமிலும் 11-14 என பின்தங்கிய நிலையில் தொடா்ச்சியாக புள்ளிகளை ஈட்டி 17-14 என முன்னிலை பெற்றது.
கலப்பு இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின்தனிஷா க்ரஸ்டோ-துருவ் கபிலா இணை 16-21, 21-17, 13-21 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் யியுச்சி-சயாகா இணையிடம் தோற்று வெளியேறியது.
தொடர்புடையது

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: வெள்ளி வென்ற சாத்விக் - சிராக்!

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

15 புள்ளிகள் ஃபாா்மட்டால் பெரிதாக வித்தியாசம் இல்லை: சிராக் ஷெட்டி

வைஷாலியின் வியத்தகு வெற்றி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



