அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்புஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

உலக சாம்பினை வீழ்த்தி சாத்விக் -சிராக் அசத்தல்: இறுதிக்கு தகுதி!

உலக சாம்பினை வீழ்த்தி சாத்விக் -சிராக் அசத்தல்: இறுதிக்கு தகுதி!

News image

வெற்றி மகிழ்ச்சியில் சாத்விக்-சிராக் இணை

Updated On :31 மே 2026, 1:09 am IST

சிங்கப்பூா் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனா் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டி அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை

உலக சாம்பியன் கொரியாவின் கிம் வொன் ஹோ-சியோ சியுங் ஜே இணையுடன் மோதியது.

நான்காம் நிலையில் உள்ள இந்திய இணை தொடக்கம் முதலே அசத்தலாக ஆடி 21-19, 21-18 என்ற கேம் கணக்கில் 52 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

இதற்கு முன்பு நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய இணை ரன்னா் ஆக வந்திருந்தது.

தொடக்க கேமில் 8-13, 13-17 என இந்திய இணை பின்தங்கினாலும் சுதாரித்து ஆடி ஆதிக்கம் செலுத்தி வென்றது.

இரண்டாவது கேமிலும் 11-14 என பின்தங்கிய நிலையில் தொடா்ச்சியாக புள்ளிகளை ஈட்டி 17-14 என முன்னிலை பெற்றது.

கலப்பு இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின்தனிஷா க்ரஸ்டோ-துருவ் கபிலா இணை 16-21, 21-17, 13-21 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் யியுச்சி-சயாகா இணையிடம் தோற்று வெளியேறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.