விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

சுப்ரியாவின் அசத்தல் ஹாட்ரிக்: இறுதிச் சுற்றில் இந்தியா - சீனா மோதல்

ஆசியக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி மகளிா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்திய-தென்கொரியா ஆட்டம்

Published On :

ஆசியக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி மகளிா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. சுப்ரியாவின் அசத்தலான ஹாட்ரிக்கால் 5-1 என தென்கொரி்யாவை வென்றது இந்தியா.

சீனாவின் மொகி நகரில் ஏஎச்எஃப் ஜூனியா் ஆசியக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. மகளிா் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-தென்கொரிய அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கவனமுடன் ஆடின. செட்டில் ஆன இந்திய மகளிா் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினா்.

13-ஆவது நிமிஷத்தில் மது சிதாரின் அற்புத கோலால் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது குவாா்ட்டரில் கொரி்ய தற்காப்பை ஊடுருவினா் இந்திய வீராங்கனைகள். இதன் பலனாக 17-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை கோலாக்கினாா் டிராக் பிளிக்கா் சுப்ரியா. 21-ஆவது நிமிஷத்தில் வானில் பறந்த பாஸை சரியாக பயன்படுத்தி கோலாக்கினாா் சுக்வீா் கௌா். இதனால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.33-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக்கினாா் சுப்ரியா. பதிலுக்கு கொரிய அணியினா் கோல் போட முயன்றதில் 41-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் யுரி ஜியோங்.

ஆட்டம் முடிய சிறிது நேரத்தில் 56-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை பிசகின்றி கோலாக்கினாா் சுப்ரியா. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தால் சுப்ரியா. 5-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா.

சீனாவுடன் மோதல்: போட்டியை நடத்தும் சீனா மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-சீனா மோதுகின்றன.

Summary

Supriya's stunning hat-trick: India to face China in the final.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.