உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தாமதமாக வரவில்லை: அணியில் சேர்க்காதது குறித்து வங்கதேச வீரர் மாற்று கருத்து!

டி20 உலகக் கோப்பையில் தாமதமாக வந்ததாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நீக்கப்பட்டது குறித்து வங்கதேச வீரர் மாற்று கருத்து.

News image

வங்கதேச வீரர் டஸ்கின் அகமது - படம்: இன்ஸ்டா / டஸ்கின் அகமது

Updated On :3 ஜூலை 2024, 4:14 pm IST

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்துடன் ஜூன் 22இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா 196/5 ரன்கள் எடுக்க வங்கதேசம் 146/8 ரன்கள் எடுத்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதில் முக்கியமான வீரர் டஸ்கின் அகமது விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேகர் அலி விளையாடினார்.

தாமதமாக வந்ததால் போட்டியில் தேர்வாகவில்லை எனக் கூறப்பட்டதுக்கு டாகா செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் டஸ்கின் அகமது மறுப்பு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் டஸ்கின் கூறியதாவது:

நான் அணியின் பேருந்தில் ஏறுவதில் சற்று தாமதம் ஆகிவிட்டது. ஆனால் டாஸ் போடுவதற்கு 30-40 நிமிடம் முன்பாகவே மைதானத்துக்கு வந்துவிட்டேன். பேருந்து 8.35க்கு கிளம்பியது. நான் அதை தவறவிட்டாலும் மைதானத்துக்கு 8.43 மணிக்கே வந்துவிட்டேன். கிட்டதட்ட பேருந்துடனே நான் மைதானத்துக்கு வந்துவிட்டேன். நான் தாமதாக வந்ததால் என்னை அணியில் எடுக்கவில்லை என்பது பொய். எப்படியும் நான் விளையாடபோவதில்லை எனக் கூறியுள்ளார்.

வங்கதேச கேப்டன் ஹகிப் அல் ஹாசன், “ அணியின் பேருந்து யாருக்காகவும் காத்திருக்காது. அது சரியான நேரத்துக்கு கிளம்பிவிடும். டஸ்கின் 5-10 நிமிடத்துக்கு முன்பாகவே மைதானத்துக்கு வந்தார். அதனால் அணி நிர்வாகம் அவரை தேர்வது செய்வது கடினம்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் யார் உண்மை பேசுகிறார்கள் எனப் புரியவில்லை என வங்கதேச வீரர்களே குழம்பியுள்ளார்கள்.

இது குறித்து விரைவில் விசாரணை நடைபெறுமென வங்கதேச தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.