
டி20 உலகக் கோப்பையில் தனது 2 ஆவது போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது உகாண்டா அணி.
டி20 உலகக் கோப்பையில் குரூப் சி-யில் உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி காலை 5மணி ) மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 19.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பப்புவா நியூ கினியா அணியில் அதிகபட்சமாக ஹிரி ஹிரி, 15 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய உகாண்டா அணி 18.2 ஓவரில் 78/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உகாண்டா அணியில் ரியாஜத் அலி ஷா 33 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
முதல் போட்டியில் தோல்வியை தழுவிய உகாண்டா அணி டி20 உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.