கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்: ஷகித் அஃப்ரிடி

பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

News image

ஷகித் அஃப்ரிடி

படம் | ஐசிசி

Updated On :11 ஜூன் 2024, 12:02 pm

DIN

பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கம் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. அதன்பின், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கனடாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று விளையாடவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேரி கிறிஸ்டன் மற்றும் பாபர் அசாம் இருவரும் பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். உஸ்மான் கானுக்குப் பதிலாக அணியில் சல்மான் அலி அஹா இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதேபோல ஷதாப் கானுக்குப் பதிலாக அப்ரார் அகமது அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

இதைத் தவிர, முகமது ரிஸ்வானுடன் ஃபகர் ஸமான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டுமென நினைக்கிறேன். பாபர் அசாம் 3-வது வீரராக களமிறங்க வேண்டும். பாகிஸ்தான் அணியின் மீது பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் இன்னும் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிவிடவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.