சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தலைமுறைக்கு ஒரு பந்து வீச்சாளராக பும்ரா! இயன் பிஷப் புகழாரம்!

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ராவை பாராட்டி பேசியுள்ளார் முன்னாள் வீரர் இயன் பிஷப்.

News image

Adam Hunger

Updated On :19 ஜூன் 2024, 9:02 pm IST

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ராவை பாராட்டி பேசியுள்ளார் முன்னாள் வீரர் இயன் பிஷப்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்தினார்.

பும்ராவை பாராட்டி முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப் கூறியதாவது:

ஜஸ்பிரித் பும்ரா திறமையான நல்ல தகவல் தொடர்பாளர். வேகமாக வீசக் கூடியவர். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்களை தாண்டியும் அந்த வேகத்தினை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று நன்கறிந்தவர். எல்லா நாள்களும் ஸ்டம்பினை பார்த்து பந்தினை வீசுவதில்லை, சில நாள்கள் யார்க்கர் வீசுவேன், சில நாள்கள் வைட் யார்க்கர் வீசுவேன், சில நேரங்களில் மெதுவான பந்துகள், பவுன்சர்களும் உபயோகிப்பேன் என பும்ரா சொல்லுவதைக் கேட்கலாம்.

இதுமட்டுமின்றி பும்ராவிடம் வேறொன்றும் உள்ளது. தனது வித்தியாசமான பந்து வீசும் முறையினால் எங்கு வேகமான பந்தினை வீச வேண்டும் என தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் சில நேரங்களில் அவரது ஃபுல்டாஸ் பந்துகளை அடிக்கமுடிவதில்லை. ஏனெனில் அவை நம்மை நோக்கி பாயும்.

சில நேரங்களில் நாம் அந்த மரியாதையை எடுத்துவிட்டால் அதனாலயே பேட்டர்களுக்கு கடினமாக இருக்கிறது. மேத்யூ ஹைடன் கர்டிலி அம்ப்ரோஸ் பந்துவீச்சினை அடிக்க நினைப்பதில்லை. ஆனால் எனது பந்து வீச்சினை அடிக்க நினைப்பார்.

Story image

Adam Hunger

ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் பந்துவீச்சாளர் என்றார்.

ஐபிஎல் போட்டியில் ஒருமுறை பும்ராவை பந்து வீசுவது குறித்து பிஎச்டி வகுப்பெட்டுக்க கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.