உகாண்டா அணியின் கேப்டன் பதவியிலிருந்து பிரையன் மசாபா விலகியுள்ளார்.
உகாண்டா கிரிக்கெட் அணியை கடந்த 5 ஆண்டுகளாக பிரையன் மசாபா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் உகாண்டா அணியை அவரே கேப்டனாக வழிநடத்தினார். குருப் சி பிரிவில் இடம்பெற்ற உகாண்டா அணி, விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில், உகாண்டா அணியின் கேப்டன் பதவியிலிருந்து பிரையன் மசாபா விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரையன் மசாபா பேசியதாவது: கடந்த சில நாள்களாகவே கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்து சிந்தித்தேன். எனது நாட்டை வழிநடத்தியது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். ஒரு வீரராகவும், அணியின் கேப்டனாகவும் தலைமைப்பண்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் அனைத்தும் என் மீதமுள்ள வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கும் என்றார்.
இதுவரை உகாண்டா அணிக்காக 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரையன் மசாபா 439 ரன்களும், 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?

உலகக் கோப்பைக்கு ரசிகரும் வரவேண்டுமென அடம்பிடிக்கும் கால்பந்து வீரர்கள்!

உலகக் கோப்பை: காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகருக்கு விசா மறுப்பு!

சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை




