ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

நமது விதி நம்முடைய கைகளில்தான் இருக்கிறது!

சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்தது குறித்து மே.இ.தீ. அணித் தலைவர் பேசியதாவது...

News image

Ramon Espinosa

Updated On :20 ஜூன் 2024, 12:17 pm IST

சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்தது குறித்து மே.இ.தீ. அணித் தலைவர் பேசியது கவனம் பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 180/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 17.3 ஓவரில் 181/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்தத் தோல்வி குறித்து மே.இ.தீ. அணியின் தலைவர் ரோவ்மன் பவல் கூறியதாவது:

பேட்டிங்கினைப் பொறுத்தவரை நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பந்து வீச்சாளர்களாக நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பான செயல்பாடுகளை அளித்திருக்கலாம். பேட்டிங்கில் கடைசி 5 ஓவர்களில் எங்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். பிராண்டன் கிங்குக்கு ஏற்பட்ட காயம் எதிர்பாராதது. ஆனால் அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என நம்புகிறேன்.

பிலிப் சால்ட் எங்களுக்கு எதிராக விளையாடும்போதெல்லாம் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். சால்ட்டுக்கு எதிராக எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

நமது விதி நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. நாங்கள் நல்ல விதமான கிரிக்கெட்டினை தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்றாக வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.