ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

உலகக் கோப்பைத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார்.

News image

படம் | AP

Updated On :21 ஜூன் 2024, 5:55 pm IST

உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை மிட்செல் ஸ்டார்க் 95 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 30 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் லாசித் மலிங்கா 94 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.