கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மகாராஷ்டிரம்: பண்டாரா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு

News image

மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனை

Updated On :9 ஜனவரி 2021, 9:22 am IST


மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. 

பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்து புகை வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த செவிலியர் ஒருவர், உடனடியாக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளார். 

Story image

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்தது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்களின் மீட்பு நடவடிக்கையால் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் இருந்த வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த 17 குழந்தைகளில் 7 குழந்தைகளை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 10 குழந்தைகளை மீட்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Story image

அனைத்து குழந்தைகளும் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று ஒரு மருத்துவர் கூறினார்.

நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மின்கசிவு  காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

புதிததாக பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.