கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

4 ஆண்டுகளுக்குப் பின் மணிமுத்தாறு அணை நிரம்பியது: அணையிலிருந்து உபரி நீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

News image

மணிமுத்தாறு மேல் மட்ட பிரதான மதகில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர்.

Updated On :9 ஜனவரி 2021, 10:44 am IST

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் பிரதானமான அணையாகும். இதில் மணிமுத்தாறு அணை 118 அடி உயரம் மற்றும் 5,511 மில்லியன் கன அடி கொள்ளளவுடன் மாவட்டத்தின் பெரிய அணையாக உள்ளது. 

மணிமுத்தாறு அணைக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அதிக நீர் வரத்து இருக்கும். ஆனாலும் ஆண்டு தோறும் மணிமுத்தாறு அணை நிரம்புவது கிடையாது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. 

சனிக்கிழமை காலை அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. 

இதையடுத்து அணையிலிருந்து 80 அடி கால்வாயில் 400 கன அடியும் மேல் மதகு மூலம் 200 கன அடியும் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. 

4 ஆண்டுகளுக்குப் பின் மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து பொதுமக்கள் அணையை கண்டுகளித்து வருகின்றனர். 

மேலும் வடகிழக்குப் பருவ மழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதாலும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் வேகமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.15 அடியும் அணைக்கு நீர்வரத்து 2061.97 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1942.29 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 144.26 அடியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.