""அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான அனுமதிக் கடிதத்தை ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்தே அந்தந்த துறையின் உயரதிகாரிகள் வழங்கி விடுவார்கள். ஆனால், வேளாண் துறையில் மட்டும் ஒவ்வொரு மாதமும் அனுமதிக் கடிதம் அனுப்பப்படுகிறது. வேளாண் செயலாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதம் துறையின் ஆணையாளர் மூலமாக அனைத்து இணை இயக்குநர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்தக் கடிதம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் கிடைத்தால்தான் ஊதியப் பட்டியலை கருவூலத் துறைக்கு 20-ம் தேதிக்குள் அனுப்ப முடியும். ஆனால், அனுமதிக் கடிதம் ஒவ்வொரு மாதமும் 27-ம் தேதி வழங்கப்படுகிறது. அதன்பிறகே, ஊதியப் பட்டியலை கருவூலத் துறைக்கு அனுப்பி ஊதியம் பெறும் நிலை உள்ளது'' என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.