அவர்களை அனுமதிப்பதன் மூலம், மின் உற்பத்தியில் 300 மெகா வாட் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இது, மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில், மாற்றுத் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் எரிசக்தி மேம்பாட்டு முகமை ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது.