""தொலைபேசி வழியாக வந்த புகார்களில், சென்னை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. டிசம்பர் மாதத்தில் 741 புகார்கள் வந்தன. பெரம்பலூர், புதுக்கோட்டையில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை. இதர மாவட்டங்களில் இருந்து இரட்டை மற்றும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே புகார்கள் வந்தன. சென்னை மாவட்டத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவை ரேஷன் அட்டை தொடர்பானவை. இந்தப் புகார்கள், சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர் போன்றோருக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள், நடவடிக்கை எடுக்கின்றனர்'' என்றார் நுகர்வோர் சேவை மையத்தின் அலுவலர்.