""பிராஜக்ட் ஆரோ திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த தகுதி வாய்ந்த ஊழியர்கள் தபால் துறையில் இல்லை. உதாரணத்துக்கு, தென் மாவட்டத்தில் ஒரு தபால் அலுவலகத்தில் 5 கண்காணிப்பாளர்கள், 34 எழுத்தர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 5 கண்காணிப்பாளர்கள் மற்றும் 4 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்களை வைத்துக் கொண்டு பிராஜக்ட் ஆரோ திட்டத்தை எப்படி சிறப்பாகச் செயல்படுத்த முடியும். மேலும், இந்தத் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றும் சில ஊழியர்களும் கசக்கிப் பிழியப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தப் பதவி உயர்வும் அளிக்கப்படுவதில்லை. சிறப்பான பணியைக் காரணம் காட்டி, போதுமான தகுதி இருந்தும் உயர் பதவிகளை அளிக்க தபால் துறையின் மண்டல அதிகாரிகள் மறுக்கின்றனர். எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு அந்த உயர் பதவிகள் அளிக்கப்படுகின்றன'' என்று புகார் தெரிவிக்கின்றனர் ஊழியர்கள். கிராம மக்களை தபால் துறையின் பக்கம் ஈர்க்க கொண்டு வரப்பட்ட "பிராஜக்ட் ஆரோ' திட்டம் பாழாகும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், தபால் துறை நிர்வாக அதிகாரிகளும் இனியாவது கவனிப்பார்களா?