தற்போது மழைக்காலம் என்பதால் வடகால் ஏரி நிரம்பி வழிகிறது. களிமண்ணால் ஆன ஏரிக்கரை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து சென்றாலே வழுக்கி விழும் நிலையில், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றால் வழுக்கி ஏரியில் விழும் அவலம். இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமலும், கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமலும், முதியோர் மற்றும் குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமலும் முடங்கி கிடக்கும் அவல நிலையில் உள்ளனர்.சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஒன்றிய ஆணையாளர், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.