கந்தர்வஹன் நினைவு: சிறுகதைப் போட்டி முடிவு அறிவிப்பு

புதுக்கோட்டை, அக். 29: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் அண்மையில் நடத்திய எழுத்தாளர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.  

புதுக்கோட்டை, அக். 29: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் அண்மையில் நடத்திய எழுத்தாளர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

 இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் ரமா ராமநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 வாலாஜாபோட்டையைச் சேர்ந்த கவிப்பித்தன் எழுதிய "சிப்பாய் கணேசன்' என்ற கதையும் வந்தவாசியைச் சேர்ந்த மு. முருகேஷ் எழுதிய "மயிரு' என்ற கதையும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சு. மதியழகன் எழுதிய "வனாந்திரம்' என்ற கதையும் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றன.

 மேலும், கோவை ஜி. தேவி எழுதிய "சமன்', மன்னார்குடி மீனாசுந்தர் எழுதிய "கஞ்சி', திருநெல்வேலி பாளையம் சையத் எழுதிய "சோதனை', சென்னை சு. தளபதி எழுதிய "கொலுசு சத்தம்', சென்னை சோ. சுப்பு எழுதிய "பொன்வண்டுகள்' ஆகிய 5 கதைகளும் ஆறுதல் பரிசு பெற்றன.

 முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாவது பரிசு ரூ. 2,000, ஆறுதல் பரிசு தலா ரூ. 250 ஆகும்.

 இவர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு நடை பெறும் கலை இலக்கிய இரவு - கந்தர்வன் விழாவில் பரிசுகள் அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com