6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

மேட்டூர், ஜன. 8: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

மேட்டூர், ஜன. 8: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் நீரின் அளவு இம்மாதம் 5-ந் தேதி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

 தற்போது காவிரி டெல்டா பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால், சனிக்கிழமை மாலை முதல் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு அணையின் நீர் மட்டம் 118.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,456 கன அடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 90.86 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.