திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: அதிமுக - திமுக வேட்பாளர்கள் மோதல்

ஈரோடு, அக். 8: ஈரோட்டில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி ஆணையர் பி.ப

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

ஈரோடு, அக். 8: ஈரோட்டில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி ஆணையர் பி.பாலச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அரசின் இலவச திட்டங்கள் குறித்து அதிமுக வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரங்கள் தொடர்பாக அதிமுக - திமுக வேட்பாளர்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக உரிய முறையில் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையெடுப்பதாக ஆணையர் உறுதியளித்தார். இந்நிலையில் திடீரென இரு கட்சி வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருக்கைகளை எடுத்து வீசி எறிந்தனர். இதனையடுத்து போலீஸார் அங்கு வந்து கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. மாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 31 முதல் 60 வார்டு வரையிலான ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.