மதுராந்தகம்,ஜன.19: பிரபல எழுத்தாளர் முனைவர் தாமரைக்கண்ணன் (படம்) (77), காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜனவரி 19) காலமானார்.
தாமரைக்கண்ணனுக்கு பத்மாவதி என்ற மனைவியும், 4 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் அச்சிறுப்பாக்கத்தில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 94441-66189. சிறுகதை, நாவல், நாடகம்,வரலாறு,குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார் தாமரைக்கண்ணன். இதில் சங்கமித்தரை,வரலாற்றுக் கருவூலம்,நெஞ்சத்தில் நீ... ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றவை.
சிறுகதைச் செம்மல்,பல்கலைச் செம்மல், நாடகமாமணி, திருக்குறள் நெறிதென்றல் உள்ளிட்ட விருதுகளையும் தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ளது.மேலும் இவர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நல்லாசிரியர் விருது பெற்றவர். உலகப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பென்ஸ் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!

ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் மோடி! போர் விமானங்கள் மூலம் வழியனுப்பிய இந்தோனேசியா!

வெள்ளத்தில் மிதக்கும் சூரத்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



