மடையின் மேல் பகுதியில் வெள்ள அபாய நேரங்களில் தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக ஆள்கள் இறங்கும் பகுதியில் சுமார் 20 அடி உயரம் வரை படிகள் அமைக்கப்படவில்லை. மேலும், அணையின் ஷட்டர் பில்லர்களை வாணம் தோண்டாமல் எழுப்பியிருக்கின்றனர். இதனால் வெள்ள அபாய நேரத்தில் அவை தாக்குப் பிடிக்காது எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, கோனார்குளத்தின் கரையாளர் மாடசாமி கூறுகையில், பனைமரங்களை வெட்ட வேண்டிய அவசியமே இல்லை. அதை வெட்டியதால் கரைக்கு ஆபத்துதான் ஏற்பட்டுள்ளது. மடை மற்றும் அணையின் கலிங்கல் (மழைநீர் பெருக்கெடுக்கும்போது தண்ணீர் திறந்துவிடும் பகுதி) ஆகியவற்றிலும் மராமத்துப் பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.