ரூ. 10 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த சிலை மொத்தம் 7000 டன் கொண்டதாகும். சிலையை முழுமையாக வடிவமைக்க 3681 கருங்கல் பாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 38 அடி உயரத்தில் பீடமும், 95 அடி உயரத்தில் சிலையும் சேர்த்து 133 அடி உயரமாகும். உலகிலேயே இது போன்ற கருங்கற்களால் ஆன பெரிய சிலை வேறெங்கும் கிடையாது என்பது இதன் சிறப்பம்சமாகும். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி அலைகளால் கூட சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய செய்தியாகும். திருவள்ளுவர் சிலையை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை இயக்கி வருகிறது.