/

உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை

அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 7:49 pm

அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வழங்கினார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 154 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 139 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவிப்புச் செய்தது.

அந்த அறிவிப்பின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு 151 உதவிப் பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 134 விரிவுரையாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.