பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக, மேலும் ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ், மதுரையில் கடந்த ஜனவரி 31-ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கீரைத்துறையைச் சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு உள்ளிட்ட 9 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
இதன்பிறகு, இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வில்வத்துரை என்பவர் சரண் அடைந்தார்.
இந்த வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்படும் அட்டாக்பாண்டி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த பி. திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் (28) மதுரை 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.
அவரை 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

