கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 2 பேர் மீது வழக்கு: வைகோ கண்டனம்

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 2 பேர் மீது வழக்கு போட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 3:35 am IST

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 2 பேர் மீது வழக்கு போட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.ராமசாமி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் மீ.தா.பாண்டியன் ஆகியோர் மீது தேச ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பேச்சுரிமையை நசுக்குவதாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்திய அரசு துரோகம் செய்யுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கும் என்று பிரதமரிடம் நேரிலும், எழுத்து மூலமாகவும் நான் கூட (வைகோ) தெரிவித்துள்ளேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து இந்தத் துரோகத்தை செய்து வருவதால், தமிழகத்தின் இளம் தலைமுறையினர் நெஞ்சங்களில் இந்திய ஒருமைப்பாடு கேள்விக் குறியாகி விட்டது.

எனவே, இருவர் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை தமிழக காவல்துறை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.