தமிழக அரசியல் கட்சிகளை இலங்கைத் தமிழர்கள் நம்பவில்லை, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளால் மட்டுமே தங்களுக்கு நன்மை செய்ய முடியும் என அவர்கள் நம்புவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி. நாராயணசாமி, காரைக்காலில் புதன்கிழமை தெரிவித்தார்.
தனது மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சத்தில் காரைக்கால் புளியங்கொட்டை சாலை மேம்படுத்துதல் பணித் தொடக்க விழாவில் புதன்கிழமை பங்கேற்று நாராயணசாமி பேசியது:
மத்தியிலும், புதுவை மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்குள்ளது. காரைக்காலில் துறைமுகம், விளையாட்டு அரங்கம், ரயில் போக்குவரத்து, என்.ஐ.டி, கேந்திரிய வித்யாலயா, கோவில் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி, புதிதாக ஆறு பாலங்கள் கட்டுவது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் தற்போதைய முதல்வர் ரங்கசாமி ஆட்சியில், மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செலுத்தப்படவில்லை, முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை, மீனவர்களுக்கு டீசல் மானியம் தரவில்லை, காவிரி தண்ணீர் பெற முயற்சிக்கவில்லை, பட்ஜெட்டில் கூறிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம், பால், பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டன.
இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. தமிழக கட்சிகள் சில, இலங்கை தமிழர்களுக்காக போராடுகின்றன. மாணவர்களை தூண்டிவிடுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது, தங்களுக்கு தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை, காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகளே நன்மை செய்ய முடியும் என்று நம்புவதாக அங்குள்ள தமிழர்கள் கூறியுள்ளனர் என்றார் நாராயணசாமி.
இந்நிகழ்ச்சியில் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. வைத்திலிங்கம், பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன், பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர். கமலக்கண்ணன், அ. மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



