ஆஸ்திரேலியா செல்லும்போது படகு பழுதானதால் துபையில் சிக்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்லும்போது நடுக்கடலில் படகு பழுதானதால் தத்தளித்துக் கொண்டிருந்த 46 ஈழத் தமிழர்களில் 7 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 20 பேருக்கு அமெரிக்காவும், ஸ்வீடனும் புகலிடம் வழங்கியுள்ளன. மீதமுள்ள 19 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப துபை அரசு முடிவு செய்துள்ளது.
இந்த 19 பேரில் ஈழத்தில் இருந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோகினி ரதிமோகனும் ஒருவர். ஏற்கெனவே, அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், லோகினியை இலங்கைக்கு அனுப்புவது சரியானது அல்ல.
எனவே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

நெய்வேலியில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


