நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பஸ் எரிப்பு: தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் ஊராட்சி தலைவர் கைது

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் தாமல் ஊராட்சி மன்றத் தலைவரை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் போலீஸôர் சனிக்கிழமை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Updated On :12 மே 2013, 3:07 am IST

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் தாமல் ஊராட்சி மன்றத் தலைவரை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் போலீஸôர் சனிக்கிழமை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ம் தேதி போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

ஏப்ரல் 30-ம் தேதி இரவு தாம்பரத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சேம்பாக்கம் பணிமனையைச் சேர்ந்த பஸ் (பச 23 ச 2296 - தட எண் 155) காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு சென்று கொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு 37 பயணிகளுடன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே இரவு 11 மணிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது தாமலைச் சேர்ந்த ஒரு கும்பல் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீ வைத்து பஸ்ஸில் தூக்கி வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுதொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), பாலு (24), குமார் (40), துரைசாமி (55), ஏகாம்பரம் (53), முரளி (51),மாரி (29), இளங்கோவன் (30), குமரன் (25), பழனி (30), ஆனந்தன் (30) ஆகியோரை பாலுச்செட்டி போலீஸôர் மே 1-ம் தேதி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார்.

இதைத் தொடர்ந்து அவரை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் சனிக்கிழமை (மே 11) உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை போலீஸôர் தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதுவரை 4 பேர் மீது தேசிய தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது: தருமபுரி மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள தீர்த்தலிங்கம், குபேந்திரன் ஆகியோர் மே 8-ல் தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை புழல் சிறையில் உள்ள வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மே 10-ம் தேதியும், வேலூர் மத்திய சிறையில் உள்ள தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் சனிக்கிழமையும் (மே 11) தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.