நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காவிரி தீர்ப்பை அமல்படுத்த இடைக்கால ஆணையம்: முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த இடைக்கால ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று, பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறியுள்ளார்.

News image
Updated On :12 மே 2013, 2:35 am IST

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த இடைக்கால ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று, பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறியுள்ளார்.

ஈரோட்டில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

காவிரி நதி நீரைப் பெறுவதில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அதுபற்றி திமுக தலைவர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை.

ஆனால், 3-ஆவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபின், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பலமுறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளப்படவில்லை.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் வரை இடைக்கால ஆணையம் அமைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இது முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

கச்சத்தீவை மீட்கப் போவதாக கருணாநிதி கபட நாடகம் ஆடுகிறார். ஆனால், இப்போது கச்சத்தீவு பற்றி விளம்பரத்துக்காக கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

ஆட்சியில் இல்லாதபோது மக்களை பற்றி பேசுவதும், ஆட்சியில் இருக்கும்போது தனது மக்களை (வாரிசுகளை) பற்றி பேசுவதும்தான் கருணாநிதிக்கு வாடிக்கை. இனிமேல் அவரை தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.