நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ராஜபட்ச அரசு மீது சர்வதேச விசாரணை: கருணாநிதி வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபட்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :12 மே 2013, 1:27 am IST

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபட்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

பல விசாரணைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. மேலும் ஒரு சான்றாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கையில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது. போர் முடிந்த பிறகும் அரசியல், சமூக நடவடிக்கைகளில் இலங்கை அரசு பொறுமையின்மையை கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமைகளும், சர்வதேச சட்டங்களும் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவில்லை. போருக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை என பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.

பொதுமன்னிப்பு சபை, சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.

எனவே, ராஜபட்ச அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நாமும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.