ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

பாமக வன்முறைச் சம்பவங்கள்:குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்

Updated On :21 மே 2013, 10:18 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 30 முதல் தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக செங்கத்தை அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (23) என்பவரை செங்கம் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர். இதேபோல, மே 5-ஆம் தேதி போளூர் அருகே பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக எழுவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சகாதி (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளேவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபாகரன், சகாதி ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.