பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தியுள்ளன.
உள்ளூர் வரிகளையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 பைசா உயர்ந்து ரூ.66.85 ஆகவும், டீசல் விலை 61 பைசா உயர்ந்து ரூ. 53.53 ஆகவும் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதுதான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும். ஆனால், சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை இல்லாத புதிய வழக்கமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாள்தோறும் மாறக்கூடியது.
எனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்துக்கான காரணியாக ரூபாய் மதிப்பைக் கருதக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

மக்கள் மனதைவிட, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடம் பிடிப்பதே முக்கியம்! ஏன்?
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


