ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இஞ்சி கிலோ ரூ.240; பீன்ஸ் கிலோ ரூ. 100

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகளின் கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :11 ஜூன் 2013, 9:08 pm

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகளின் கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், அதிகபட்சமாக இஞ்சி கிலோ ரூ.240, பீன்ஸ் கிலோ ரூ.100, சிறிய வெங்காயம் கிலோ ரூ.110 என விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், அண்மைக்காலமாக காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மாதந்தோறும் காய்கறிகளுக்கென தனி பட்ஜெட்டை ஒதுக்கும் நிலைக்கு நடுத்தரக் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை (கிலோவில்): கோஸ் ரூ.20, அவரை ரூ.80, பீன்ஸ் ரூ.100, முருங்கைக்காய் ரூ.70, கேரட் ரூ.60, கத்திரி ரூ.50, கருணை ரூ.30, உருளை ரூ.30, முள்ளங்கி ரூ.30, மாங்காய் ரூ.20, வெண்டை ரூ.40, பீட்ரூட் ரூ.30, பச்சைமிளகாய் ரூ.50, இஞ்சி ரூ.240, வெங்காயம் ரூ.30 முதல் 40 வரை, சிறிய வெங்காயம் கிலோ ரூ.110, நாட்டுத் தக்காளி ரூ.35 முதல் ரூ.45 வரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை (சிறிதளவு) குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிகப்பட்சம் ரூ.10 என விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த வியாபாரி தியாகராஜன் கூறியது: தமிழகத்தில் காய்கறி விளைச்சல் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. அப்படி விளைச்சலாகும் காய்கறிகளும் அந்ததந்த பகுதிகளில் உள்ள சந்தைகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவு வருவதில்லை. இங்கு ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.