கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. பாக் ஜலசந்தியை கடந்து செல்லக் கூடாது என தமிழக மீனவர்கள் மிரட்டப்படுவதோடு அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அரசுடன் பேசி நமது மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1951-இல் நேபாளத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு விரும்புகிறது. அதுபோல இலங்கையுடன் 1974-இல் ஏற்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









