மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் சப்தம், கரும்புகை?

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பயங்கர சப்தமும், கரும்புகையும் வருவதாக அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு புகார் தெரிவித்துள்ளது. ஆனால், இதை அணுஉலை வட்டாரம் மறுத்துள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 8:43 pm

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பயங்கர சப்தமும், கரும்புகையும் வருவதாக அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு புகார் தெரிவித்துள்ளது. ஆனால், இதை அணுஉலை வட்டாரம் மறுத்துள்ளது.

மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சோதனை எதுவும் நடைபெறவில்லை என அணுஉலை வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலைக்கெதிரான தொடர் போராட்டம் இடிந்தகரையில் நடைபெற்று வருகிறது. அணுஉலையைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும் அணுஉலையில் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

முதன்முதலாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது வால்வுகளில் கசிவு ஏற்பட்டதையடுத்து சோதனை ஓட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து வால்வுகள் மாற்றும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், அணுஉலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கர சப்தம் கேட்டதாகவும், அணுஉலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதாகவும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி அணுஉலை நிர்வாகம் எதையோ செயல்படுத்தி வருவதால் இந்த சப்தம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அணுஉலை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அணுஉலையில் உள்ள ஜெனரேட்டர் சோதனை செய்யப்படுகிறது. வேறு எந்தச் சோதனையும் நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.