கும்மிடிப்பூண்டி அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை வருவாய்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் பகுதியில் ஈஸ்வரி செங்கல்சூளை இயங்கி வருகிறது.
இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக திருவள்ளூர் கோட்டாட்சியர் அபிராமிக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், கோட்டாட்சியர் அபிராமி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட செங்கல்சூளையில் சோதனை நடத்தினர்.÷அப்போது அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 91 குடும்பங்களைச் சேர்ந்த 273 பேர் கொத்தடிமைகளாக இருந்ததது தெரியவந்தது.÷இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.÷இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ், அங்கு வந்து விசாரணை நடத்தினார்.÷இதனைத்தொடர்ந்து, குழந்தைகளை தவிர்த்து மீதமுள்ள 189 பேருக்கு விடுதலை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.÷பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் போலீஸார், தலைமறைவாகியுள்ள செங்கல்சூளை உரிமையாளரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


