மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிறுநீரக விற்பனை: மேலும் மூவர் கைது

சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக மேலும் 3 பேரை தருமபுரி மாவட்ட போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :11 ஜூன் 2013, 8:53 pm

சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக மேலும் 3 பேரை தருமபுரி மாவட்ட போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் ஏழை மக்களிடம் சிறுநீரக மோசடி நடப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க்கிற்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பரமேஷ்வரா, கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகன் பாலசுப்பிரமணியத்தின் ஒரு சிறுநீரகத்தை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், போடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷுக்கு சட்டவிரோதமாக தானம் வழங்க முயற்சி செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த முகவர் அய்யாவு (51), தருமபுரி மாவட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40) ஆகியோரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு அருகே உள்ள பெரிய மணலியைச் சேர்ந்த ஆர்.சீனிவாசன் (35), குமாரபாளையத்தைச் சேர்ந்த என்.ஷாஜகான் (45), சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள லாத்தேரியைச் சேர்ந்த பி.வடிவேல் (46) ஆகிய மூன்று முகவர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 5 பேரும் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.