திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து கோவை வரை செல்லும் செம்மொழி விரைவு ரயில் சேவையை மன்னார்குடியில் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மன்னார்குடி - கோவை இடையிலான செம்மொழி விரைவு ரயில் (வண்டி எண் 16615) மன்னார்குடியிலிருந்து நாள்தோறும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவை சென்றடையும்.
மறுவழித்தடத்தில் கோவை - மன்னார்குடி (வண்டி எண்-16616) விரைவு ரயில் நாள்தோறும் கோவையிலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு மன்னார்குடி வந்தடையும். இந்த
செம்மொழி விரைவு ரயில் சேவை ஜூன் 11-ம் தேதி தொடங்கும் என அண்மையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி, ரயில் சேவையின் தொடக்க விழா மன்னார்குடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் ரயில் சேவையை இரவு 8.10 மணிக்கு தனி மேடையிலிருந்து மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளாரங்கராஜன், கூடுதல் கோட்ட மேலாளர் எஸ்.ஏ.அப்துல்ரகுமான் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


