செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

குற்றாலம்: ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது தண்ணீர்!

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதைத் தொடர்ந்து பேரருவியில் வெள்ளிக்கிழமை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

News image
Updated On :21 ஜூன் 2013, 10:09 pm

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதைத் தொடர்ந்து பேரருவியில் வெள்ளிக்கிழமை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரல் மழை, வெயிலுமாக மாறிமாறி தட்ப வெப்பநிலை நிலவியது. குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் விழுகிறது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: இதற்கிடையே, பேரருவியில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தொடர் சாரல் மழை காரணமாக பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் பேரருவியில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.