காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியானது.
மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 20-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிச்சிவாக்கம், உள்ளாவூர், குண்டுகருமேடு, வடக்குமனையம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன.
அதாவது உரிய மாணவரின் புகைப்படத்துக்கு பதிலாக மற்றொரு மாணவரின் புகைப்படம், ஊர் பெயரில் எழுத்துப் பிழை, ஊர் பெயரில் பின்கோடு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இப்புகாரைத் தொடர்ந்து மாவட்டக் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுத் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய பிழைகளை திருத்தி தரக் கோரி ஆசிரியர்கள் அணுகினர்.
அடுத்த ஓரிருநாளில் உரிய பிழைகள், புகைப்படங்கள் திருத்தி தருவதாக தேர்வுத்துறை உறுதியளித்துள்ளது.
இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்தது முதலே பல்வேறு குளறுபடிகளை கல்வித்துறை சந்தித்து வந்தது. 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டுள்ள குளறுபடி கல்வித் துறை மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

