இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிக்கும் வகையில் குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி பள்ளியை ஜூன் 25-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டுச் செயல்படும் இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறது.
தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பைக் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவே இல்லை. கடந்த மே 27-ஆம் தேதியில் இருந்து சிங்கள ராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல, அக்கொடியோர் நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவும் நடத்தியுள்ளனர். ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாள்தோறும் தாக்குவதும், சிறைப் பிடிப்பதும் தொடர்கிறது.
எனவே, 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிப் பள்ளியை முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


