வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

என்.எல்.சி. தலைவருக்கு சிறந்த அதிகாரி விருது

இந்த ஆண்டின் சிறந்த அதிகாரிக்கான விருதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு பியூரோகிரசி பிரபல ஆங்கில இதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2013, 3:36 am IST

இந்த ஆண்டின் சிறந்த அதிகாரிக்கான விருதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு பியூரோகிரசி பிரபல ஆங்கில இதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

÷மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் தொடர்பாக, புதுதில்லியிருந்து வெளியாகும் பியூரோகிரசி எனும் ஆங்கில இதழ் செய்திகள் வெளியிட்டு வருகிறது.

மேலும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி இவ்வாண்டின் சிறந்த பொதுத் துறை நிறுவனங்களையும், அந்நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையும் தேர்வு செய்வதற்காக பிரமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவர் குழுவினர் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனை இவ்வாண்டின் சிறந்த அதிகாரியாக தேர்வு செய்தனர்.

இதற்கான விருது வழங்கும் விழா புதன்கிழமை புதுதில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹரியானா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, அருணாச்சல பிரதேச ஆளுநர் நிர்பாய் ஷர்மா, சட்டீஸ்கர் மாநில ஆளுநர் சேகர்தத் ஆகியோர் கலந்துகொண்டு என்எல்சி தலைவருக்கு சிறந்த அதிகாரிக்கான விருதை வழங்கி கெளரவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.