கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 2:37 am IST

தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கேரள எல்லையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையின் காரணமாக மழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தேவாலா பகுதியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடலூர் (70 மி.மீ.), வால்பாறை (50 மி.மீ.), நடுவட்டம் (40 மி.மீ.), சின்னக்கல்லாறு (30 மி.மீ.), உதகை, குந்தா (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை

பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.