மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை காரும் தனியார் பஸ்ஸூம் மோதிக் கொண்டதில், கணவன், மனைவி மற்றும் அவர்களின் பேத்தி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து (67). இவரது மனைவி தனவதி (63). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் கடைசி மகன் அம்மையப்பன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியஷா (8), மகன் பிரதீப் (5). அம்மையப்பன் வியத்நாம் சென்றுள்ளார். இதையடுத்து, பிரியஷா, பிரதீப் ஆகியோர் தாத்தா, பாட்டியைப் பார்க்க தளவாய்புரம் வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மையப்பன் வெளிநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்புவதை அடுத்து, பிரியஷாவையும், பிரதீப்பையும் சென்னைக்கு காரில் மாரிமுத்துவும், அவரது மனைவி தனவதியும் அழைத்துச் சென்றுள்ளனர். காரை தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டியுள்ளார்.
மதுரை நான்கு வழிச் சாலையில் யா.ஒத்தக்கடை அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது மேலூரில் இருந்து மதுரை நோக்கிவந்த தனியார் பஸ்ஸூம், காரும் மோதிக் கொண்டன. இதில் பஸ்ஸின் அடிப்பகுதியில் கார் சிக்கி, பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மாரிமுத்து, தனவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிறுமி பிரியஷா, பிரதீப் மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிறுமி பிரியஷா வழியிலே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
பஸ்ûஸ கிரேன் மூலம் தூக்கிய பிறகே காரில் சிக்கியவர்களை மீட்க முடிந்தது. விபத்தில் சாலை சந்திப்பில் இருந்த உயர்நிலை மின்விளக்கு கம்பமும் சேதமடைந்தது.
விபத்து குறித்து யா.ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனியார் பஸ் ஓட்டுநர் அருக்கம்பட்டி பிரபாகரனைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சீரழித்தவர் மமதா : பிரதமர் மோடி

சேயோனில் பாக்யஸ்ரீ போர்ஸ்!

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

