அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ரயில் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :27 ஜூன் 2014, 11:19 am

விருதுநகரில் ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   விருதுநகர் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். இதில், ரயில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த பெண் உள்பட 90 பேர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 45 பேரும், சிவகாசியில் சட்டப்பேரவை தொகுதி செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 பேரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.