மார்க்கெட்டுக்குள் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக, இந்தப் பகுதியின் சுகாதரப்பணியை நகராட்சி சார்பில் மேற்கொள்ளும் எக்ஸ்னோரா அமைப்பிற்கு மாதம் ரூ.7500 கொடுக்கிறோம். கடந்த ஒரு மாத்திற்கு மேலாக, எக்ஸ்னோரா அமைப்பின் பொறுப்பாளரிடம் மார்க்கெட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கழிவு நீர் பாதையை தூர்வார கூறிக்கொண்டே உள்ளேன். ஆனால் துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை. கழிவுநீர் பாதையை தூர்வாரி, முறைப்படி கழிவுகளை அள்ளினாலே மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுவது நின்றுவிடும். இதே நிலை நீடித்து மழை சற்று பலமாக பெய்தால், மார்க்கெட் கடைகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.