ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆளுநர் உரை கிழிப்பு: திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் சஸ்பெண்ட்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்) வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆளுநர் உரையை கிழித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2014, 11:53 pm

தினமணி

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்) வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆளுநர் உரையை கிழித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இடையே அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் விவரம்:

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் வந்து திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் நடந்து கொண்ட விதத்தை அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். அவை மரபுகளுக்கு மாறாக விதிகளை துச்சமாக மதித்து பேரவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலான அவரது நடவடிக்கை தரம் தாழ்ந்ததாகும். ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் சட்டப் பேரவையில் தெரிவித்த கருத்துக்கு எதிர் கருத்துச் சொல்ல இயலாத நிலையில், ஆத்திரம் காரணமாக பேரவைத் தலைவரை மிரட்டும் வகையில் அவரது இருக்கைக்கு அருகே வந்து தான்தோன்றித்தனமாக சிவசங்கர் செயல்பட்டுள்ளார்.

மேலும், பேரவையின் மதிப்பையும், இறையாண்மையையும் காக்கும் பொறுப்புள்ள பேரவைத் தலைவரின் எதிரே ஆளுநர் உரை பிரதிகளை கிழித்தெறிந்திருப்பது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்கத்தையும், உரிமைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் பேரவையின் தரம் பொது மக்கள் மத்தியில் தாழ்ந்து விடும்.

இதுபோன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமாகும். எனவே, பேரவை அலுவல்களை நடைபெறவிடாமல் இடைமறித்து, பேரவை விதிகளுக்கு மாறாக, அவைக்கு இழுக்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட எஸ்.எஸ்.சிவசங்கரை, இக் கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார்.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து கூட்டத் தொடர் முழுவதும் எஸ்.எஸ்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.