அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில் சமையலர், துப்புரவு பணிக்கான நேர்காணல்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சமையலர் மற்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27-ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Updated On :23 ஆகஸ்ட் 2015, 1:37 pm

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சமையலர் மற்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27-ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

இம்மாவட்டத்தில் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 19 சமையலர் மற்றும் 26 பகுதி நேர துப்புரவு பணியாளர் காலியிடம் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அமைத்து, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இப்பணிக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27, 28 ஆகிய நாள்களில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் மேற்குறிப்பிட்ட நாள்களில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.