அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 37 பேர் கைது

விருதுநகரில் அரசு நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 37 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :25 ஆகஸ்ட் 2015, 11:58 am

விருதுநகரில் அரசு நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 37 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பகம், முருகேஸ்வரி, அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க ஆண்கள் இருக்கக் கூடாது, ரூ.5000 மதிப்புக்கு மேல் சொத்து இல்லாமல் இருப்பது போன்ற பொல்லாத விதிமுறைகளை அரசு கடைபிடித்து வந்தது. தற்போது, கடந்த ஏப்.17ம் தேதி வெளியிட்ட அரசாணையில் உதவித் தொகை பெற அனாதையாக இருக்க வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இம்மாவட்டத்தில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அரசு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகாசி-21 பேரும், அருப்புக்கோட்டை-11 பேரும், ராஜபாளையம்-54 பேரும், சாத்தூர்-69 பேரும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பேரும் என மொத்தம் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.